ஆளுமை:அடேல் பாலசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அடேல் பாலசிங்கம்
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் -
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அடேல் பாலசிங்கம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ‘விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்’ (women fighters of liberation Tigers) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் பெண் போராளிகளின் போராட்ட வரலாற்றை தொகுத்துத் விளக்குகின்றது. ‘சுதந்திர வேட்கை’ ( The Will to Freedom) என்ற இவரது நூல் சுயசரிதை விவரணமாகவும், வரலாற்று நோக்குடனும் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்து சீதண முறைமை பண்டைய தாய்வழிச் சொத்துடமை உறவு முறையுடன் தொடர்பு உடையது என்பதை நிறுவும் ஆய்வாக இவரது ‘உடையாத விலங்குகள்’ (Unbroken Chain) என்ற நூல் திகழ்கின்றது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய இந்த மூன்று நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மிகச் சிறந்த வரவற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


வெளி இணைப்புக்கள்