ஆளுமை:கடகம்பேசுவரன், நவரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கடகம்பேசுவரன்
தந்தை நவரத்தினம்
பிறப்பு 1947.12.10
ஊர் வட்டுக்கோட்டை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கடகம்பேசுவரன், நவரத்தினம் (1947.12.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர், நாடகக் கலைஞர். 1970களில் எழுத ஆரம்பித்த இவர் வட்டூர் கடம்பன், ஆடல்வல்லான், காப்பியதாசன், வட்டூர்வாணன் போன்ற புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

இவரது ஆக்கங்கள் ஈழநாடு, ஈழமுரசு, உதயன், முரசொலி, வீரகேசரி, தினக்குரல், தினகரன் போன்ற பத்திரிகைகளில் எழுதியுள்ளார். மூலவேர் (வாழ்வியற் கட்டுரைகள், 1993), பொற்கலசம் (கட்டுரைகள்), பொறுப்பனோ யான் (நாடகம்), தீந்தேன் (கவிதைகள், 2009) போன்றவை இவரது நூல்கள். பெண்மை கொல்லோ பெருமையுடைந்து, வாழ்க்கைப் பயணங்கள், பாவலரும் காவலரும் போன்ற நாடகங்களையும் இவர் மேடையேற்றியுள்ளார்.

ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம், இலங்கை சைவப்புலவர் சங்கம், சைவபரிபாலன சபை போன்ற அமைப்புக்களில் உறுப்பினராக இருந்துள்ளார். பண்டிதர் பட்டத்தையும் (1994) வலிகாமம் மேற்குக் கலாச்சாரப் பேரவையின் கலைவாரிதி பட்டத்தினையும் (2001) பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 04-05
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 58