ஆளுமை:சந்திரா, இரவீந்திரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரா, இரவீந்திரன்
தந்தை மு.ச.தியாகராஜா
தாய் சிவகாமசுந்தரி
பிறப்பு 03-09-1963
இறப்பு -
ஊர் பருத்தித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
ChandrRavindran.jpg

சந்திரா, இரவீந்திரன் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறையில் மேலைப்புலோலியூர் ஆத்தியடியை பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்.இவரது தந்தை மு.ச.தியாகராஜா; தாய் சிவகாமசுந்தரி. பருத்தித்துறை- வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் தனது பாடசாலைக்கல்வியை முடித்துக்கொண்டு கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தார் பருத்தித்துறை மாவட்டநீதிமன்றத்தில்(1985-87) பயிற்சிப்பணியை முடித்துக்கொண்டு யாழ் அரசசெயலகத்தில் (1987-1991) பணியாற்றினார். 1981ல் 'ஒரு கல்விக்கிரகமாகிறது' என்ற சிறுகதை மூலம் செல்வி.சந்திரா தியாகராஜாவாக இலக்கிய உலகிற்குஅறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து 1988இல் பருத்தித்துறை யதார்த்த இலக்கிய வட்டத்தினால் இவரது ‘நிழல்கள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 2011 இல் ‘நிலவுக்குத் தெரியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. இவர் 1991இல் பித்தானியாவிற்கு இடம்பெயர்ந்து இலண்டனில் வசித்து வருகின்றார். லண்டனில் 1999-2007 வரை அனைத்துலக ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில்(ஐ.பி.சி) சில நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கி வந்தார். தற்போது தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்