ஆளுமை:சாந்தி முஹியித்தீன், முகம்மது மீராசாகிபு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாந்தி முஹியித்தீன், முகம்மது மீராசாகிபு
பிறப்பு 1942.10.09
ஊர் காத்தான்குடி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாந்தி முஹியித்தீன் (1942.10.09 - ) மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவர் அகமதுலெவ்வை என்னும் இயற்பெயரைக் கொண்டவர். இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளை பாவலர், காத்தான்குடிக் கவிராயர், ஷா, சாஅதி ஆகிய புனைபெயர்களில் எழுதியுள்ளார். இலக்கிய இதழ் கையெழுத்துப் பத்திரிகை முதல் பாவலர் பண்ணை வெளியிட்ட ‘பா’ என்னும் கவிதைப் பத்திரிகை வரை பல பத்திரிகைகளின் ஆசிரியராகவும் ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார். இவர் பல நாடகங்களில் பங்கேற்றுத் தனது கலைத்திறமையை வெளிக்காட்டியுள்ளார். பாவலர், இலக்கியச்சுடர், இலக்கிய வித்தகர், கலாஜோதி, இலக்கியக் காவலர் ஆகிய பட்டங்களுடன் ஆளுநர் விருது, கலாபூசணம் விருதையும் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 28-34


வெளி இணைப்புக்கள்