ஆளுமை:சிவகுமார், குகதாசசர்மா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமார்
தந்தை குகதாசசர்மா

தாய்=

பிறப்பு 1967
ஊர் சுன்னாகம், யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமார், குகதாசசர்மா (1967) யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வர வித்தியாலயத்திலும், மயிலணி சைவ மகாவித்தியாலயத்திலும் கற்றார். உயர் கல்வியை மகாஜனாக் கல்லூரியில் கற்றார்.

தனது 20வயதில் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். ஆரம்பத்தில் முரசொலியில் எழுதி வந்தார். உதயன், வலம்புரி, ஞானச்சுடர், தாயகம் போன்ற பத்திரிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. சிறுவர் பாடல் என்னும் பாடல்தொகுதியையும் தரம் ஐந்து மாணவர்களுக்கு சுற்றாடல் சார்ந்த இறுவட்டு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

படைப்புகள்


வளங்கள்

  • நூலக எண்: 4076 பக்கங்கள் 36