ஆளுமை:பராசக்தி, ஜெகநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பராசக்தி
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் சிவபாக்கியம்
பிறப்பு -
இறப்பு -
ஊர் முல்லைத்தீவு
வகை இசை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பராசக்தி, ஜெகநாதன் முல்லைத்தீவு முள்ளியவளையில் பிறந்தவர். இசைத்துறை ஆளுமையாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை; தாய் சிவபாக்கியம். முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கல்வி கற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இசைகலைமாணி பட்டத்தையும் வட இலங்கை சங்கீதசபையின் கலாவித்தகர், தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா ஆகியவற்றையும் முடித்துள்ளார். பாடசாலைக் கல்வியோடு கர்நாடக இசை, இசை நாடகம், நாட்டுக்கூத்து என்பவற்றைக் குருகுலக் கல்வியாகப் பயிற்றுள்ளார். இவரின் தந்தை ஒரு நாட்டுக் கூத்துக் கலைஞர். இவரின் பரம்பரை தலைமுறை தலைமுறையாக முல்லைமோடி நாட்டுக்கூத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆடிவருகின்றனர். பராசக்தி தனது ஒன்பது வயதில் இருந்தே இசை, நாடகம் என்பவற்றை முறையாகப் பயின்று 10ஆவது வயதில் அரிச்சந்திரா இசை நாடகத்தில் விசுவாமித்திரர் வேடம் ஏற்று நடித்துள்ளார். இவரின் இசைத்துறையை கௌரவிக்கும் வகையில் இவர் பின்வரும் விருதுகள் பெற்றுள்ளார்.

விருதுகள் வவுனியம் - மாவட்ட விருது முதலமைச்சர் விருது - மாகாண விருது கலாபூஷணம் விருது (தேசிய மட்டம்)

குறிப்பு : மேற்படி பதிவு பராசக்தி, ஜெகநாதன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.