ஆளுமை:றோகிதா, புஸ்பதேவன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றோகிதா
தந்தை புஸ்பதேவன்
பிறப்பு 2002.07.18
ஊர் ஸ்கந்தபுரம்
வகை விஞ்ஞானி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றோகிதா, புஸ்பதேவன் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் பிறந்த விஞ்ஞானி. இவரது தந்தை புஸ்பதேவன். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தந்தையை இழந்த றோகிதா தாய் மற்றும் சகோதரியுடன் வவுனியாவிற்கு இடம்பெயர்ந்தார். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்றார். கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தி பெற்ற உயர் கல்வியைத் தொடர வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இணைந்து கொண்டார். தனது உயர்தரத்தில் தொழில்நுட்பத் துறையில் கல்வியைத் தொடர்ந்து கொண்டுள்ள இவர் ஏதாவது கண்டு பிடிக்க வேண்டும் எண்ணத்துடன் செயற்பட்ட இவர் உயர்தரத்தில் கற்கும் போதே குருதியைப் பெற்றுக்கொள்ளும் தானியங்கி ரோபோ (Auto Needle Injector) யை கண்டுபிடித்துள்ளார்.

பொருளாதாரப் பிரச்சினைகளின் மத்தியில் இவரின் தாய், தந்தை இல்லாது இவரையும் இவரது சகோதரியையும் கற்பித்து வருகிறார். நீரழிவு நோயாளர்களின் சீனியின் அளவையும் குருதியின் வகையையும் பரிசோதிப்பதற்கு தேவையான குருதியைப் பெற்றுக்கொள்ளும் தானியங்கி ரோபோ இயந்திரமே றோகிதாவின் கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் வைத்தியர்களினதும் தாதியர்களினதும் வேலைப்பளுவைக் குறைத்து எதிர்காலச் சந்ததியின் நன்மை கருதி நேரத்தை மீதப்படுத்தும் முகமாக இந்த தன்னியக்க இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கின்றார் றோகிதா என்னும் இந்த இளம் விஞ்ஞானி.

வெளி இணைப்புக்கள்