ஆளுமை:வாணி, சிவகணேசசுந்தரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வாணி
தந்தை சொக்கலிங்கம்
தாய் தெய்வானை
பிறப்பு 1958.07.05
ஊர் யாழ்ப்பாணம்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாணி, சிவகணேசசுந்தரன் (1958.07.05) யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சொக்கலிங்கம்; தாய் தெய்வானை. ஆரம்பக் கல்வியை மகேஸ்வரி வித்தியாசாலையிலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணி பட்டம் பெற்ற இவர் மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் கல்வி டிப்ளோமாவையும் முடித்துள்ளார். இவரின் கணவர் சிவகணேசசுந்தரன் ஓய்வுபெற்ற அதிபராவார். புகழ்பூத்த எழுத்தாளரான சொக்கன் இவரின் தந்தையாவார்.

படைப்புகள்

  • சைவவினாவிடை ஆண்டு 11
  • கட்டுரைக்கோவை ஆண்டு 5, 6
  • சைவநெறிப்பயிற்சி ஆண்டு 7
  • சைவநெறிப்பயிற்சி எட்டாம் வகுப்பு
  • சைவநெறிவினாவிடை 10ஆம் வகுப்பு


குறிப்பு : மேற்படி பதிவு வாணி, சிவகணேசசுந்தரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.