பேச்சு:ஈழத்து இலக்கிய வளர்ச்சி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

1891இல் வெளிவந்த ஊசோன் பாலந்தை கதை தொடக்கம், 1964ம் ஆண்டுவரை வெளிவந்த இலக்கியங்கள் பற்றிய தகவலும் திறனாய்வுக் கருத்துக்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஈழகேசரி நா.பொன்னையா அவர்கள் பிறந்த குரும்பசிட்டியில் 1916ம் ஆண்டு பிறந்த கனக செந்திநாதன், சோ.சிவபாதசுந்தரத்தின் அரவணைப்பில் எழுத்துத்துறையுள் புகுந்தவர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் படித்து இலக்கிய இரசனை பெற்ற இவர் ஒரு நடமாடும் வாசகசாலை என்று பலராலும் புகழப்பெற்றவர். இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இலக்கிய வரலாறு குறித்து முழுத்தகவல்களையும் அரிதில் முயன்று இந்நூலிலே இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள் திரட்டியுள்ளார். 1922-1960 வரையும், 1960இன் பின்னரும் என இவரது இலக்கிய வளர்ச்சிக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம்
ஈழத்து இலக்கிய வளர்ச்சி. கனக செந்திநாதன். கொழும்பு: அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1964. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ்). xxiv + 208 பக்கம், தகடுகள், விலை: ரூபா 3.50., அளவு: 18.5 *12.5 சமீ.

ஈழத்து இலக்கிய வளர்ச்சி. கனக செந்திநாதன். சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 375/8-10, ஆர்க்காடு சாலை, 1வது பதிப்பு டிசம்பர் 2000. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 375/8-10, ஆர்க்காடு சாலை). 240 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 18 * 12 சமீ., ISBN: 1 876626 13 5.



-நூல் தேட்டம் (3750)