ஆளுமை:அகஸ்தியர், சவரிமுத்து

From நூலகம்
Name அகஸ்தியர்
Pages சவரிமுத்து
Pages அன்னம்மாள்
Birth 1926.08.24
Pages 1995.12.08
Place ஆனைக்கோட்டை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகஸ்தியர், சவரிமுத்து (1926.08.24 - 1995.12.08) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சவரிமுத்து; தாய் அன்னம்மாள். இனப்பிரச்சினை காரணமாக 1986 இல் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார். இவர் 350 க்கும் அதிகமான சிறுகதைகள், குட்டிக் கதைகள், வானொலி நாடகங்கள், நாட்டுக்கூத்து நாடகங்கள், கட்டுரைகள், குறுநாவல்கள், நாவல்களை எழுதியுள்ளார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர்.

இவர் ஆரம்பத்தில் சுதந்திரனில் எழுதத் தொடங்கினார். தினகரன், வீரகேசரி, தினபதி, ஈழநாடு, மல்லிகை, சுடர் போன்ற ஈழத்து இதழ்களிலும் எழுத்து, தீபம், கண்ணதாசன், கலைமகள், தாமரை போன்ற தமிழக இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. இருளினுள்ளே, திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடை பாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள் போன்றன இவரது நூல்கள்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources