ஆளுமை:அப்துல் கஹ்ஹார், அ. மு.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் கஹ்ஹார்
பிறப்பு 1934.07.19
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் கஹ்ஹார், அ. மு. (1934.07.19 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் திருகோணமலை சின்னக் கிண்ணியா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, திருகோணமலை பெரிய கிண்ணியா அரசினர் ஆண்கள் பாடசாலை, திருகோணமலை கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று எழுதுவினைஞராகக் கடமையாற்றினார்.

1954 இல் எழுதத் தொடங்கிய இவர் வள்ளல், அண்ணல்தாசன், மாஞ்சோலைக் கவிராயர் போன்ற புனைபெயர்களில் பெருமளவு கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நற்பண்பும் நபிமொழியும், அண்ணல் மாநபி பிறந்தனரே, அப்துல் கஹ்ஹார் கவிதைகள், அதிசயம், நபிகள் நாயகரின் நான்மணிக் கடிகை போன்றவை இவரது கவிதை நூல்கள். 1997இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் வழங்கிய கலாஜோதி பட்டம் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 64-66