"ஆளுமை:அம்பலவாணர், சண்முகம் (அம்பலச் சட்டம்பியார்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அம்பலவாணர்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

03:11, 3 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அம்பலவாணர், சண்முகம் (அம்பலச் சட்டம்பியார்)
தந்தை சண்முகம்
தாய் சின்னாச்சிப்பிள்ளை
பிறப்பு
இறப்பு 1935
ஊர் காரைநகர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காரைநகர் பதியிலே சண்முகம் என்பவருக்கும் சின்னாச்சிப்பிள்ளைக்கும் பிறந்த மகனே அம்பலச் சட்டம்பியார் என்று அழைக்கப்படும் அம்பலவாணர் என்பவர். தெல்லிப்பளையில் அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் திரு ஜெருமையா, அல்லின் ஏபிரகாம் ஆகியோரிடம் இலக்கியமும் இலக்கணமும் கற்றுத் தேர்ச்சிபெற்ற ஆசிரியராக பட்டம் பெற்றார்.

சில நாள் ஆசிரியராக பணி புரிந்த பின்னர் மலாய் நாட்டில் ரவுண் ஓவசியராக வேலை பார்த்தார். அதன் பின் மீண்டும் தாய் நாட்டிற்கு வந்து ஆங்கில வித்தியாசாலையில் தமிழ்ப்பண்டிதராக 18 ஆண்டு தொண்டாற்றினார். 1933ல் ஆசிரியப் பதவியிலிருந்து இளைப்பாறிய அவர் 1935ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதி மரணமடைந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 303-304