ஆளுமை:அரியரெத்தினம், சந்தியாப்பிள்ளை

From நூலகம்
Name அரியரெத்தினம்
Pages சந்தியாப்பிள்ளை
Pages சந்தனம்
Birth 1944.12.22
Place மட்டக்களப்பு, வாகரை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரியரெத்தினம், சந்தியாப்பிள்ளை (1944.12.22 - ) மட்டக்களப்பு, வாகரையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சந்தியாப்பிள்ளை; தாய் சந்தனம். இவர் வாகரைவாணன் எனும் புனை பெயரால் அழைக்கப்பட்டார். வாகரை தமிழ் பாடசாலை, சென்மேரிஸ் பாடசாலை, சிவானந்தா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றவராவார். சுதந்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், உதயசூரியன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

சுட்டபொன், பயணம், துரோணர் வதம், எண்ணத்தில் நீந்துகிறேன், தமிழ்ப்பாவை, கடற்கரைப்பூக்கள், இனிக்குந்தமிழ், கிறிஸ்தவ தத்துவம், விபுலானந்தம், அருள் அந்தோனியார், ஒரு பூ மலர்கிறது, பாலர் தமிழ்ப்பாட்டு, சின்னச் சின்ன கதைகள், சின்னச் சின்ன பூக்கள், சிறுகதை விமரிசனம், கிறிஸ்து காவியம் முதலான பல்வேறு படைப்புக்களை ஆக்கியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக விருது, சாகித்திய இலக்கிய விருது என்பனவற்றைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 144
  • நூலக எண்: 1034 பக்கங்கள் 06-07
  • நூலக எண்: 2047 பக்கங்கள் 17-23