ஆளுமை:அல்லின் ஏபிரகாம், சுப்பிரமணியம்

From நூலகம்
Name அல்லின் ஏபிரகாம்
Pages சுப்பிரமணியம்
Pages பார்வதி
Birth 1865
Pages 1922.07.07
Place காரைநகர்
Category வானியல் ஆராய்ச்சியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அல்லின் ஏபிரகாம், சுப்பிரமணியம் (1865 - 1922.07.07) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் பார்வதி. இவரது பெற்றோர் 1876 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சம், கொள்ளைநோயினால் இறந்துவிட்டனர்.

சிறுவராக இருந்த இவர், அமெரிக்க மிஷனரியின் தெல்லிப்பளை விடுதிப் பாடசாலையிற் சேர்ந்து படித்தார். கல்விப்புலமை காரணமாக ஆசிரியர் பயிற்சிச்சாலையில் சேர்க்கப்பட்ட இவர், 1883 இல் கல்வி அதிபதியின் சான்றுடன் பயிற்சி பெற்ற இரண்டாந்தரப் பத்திரம் பெற்று பயிற்சிச்சாலையிலிருந்து வெளியேறினார்.

பின்பு ஐந்து வருடம் யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்று கலைமாணிப் பட்டதாரியான பின்னர், தெல்லிப்பளை ஆசிரியர் பயிற்சிச்சாலையில் மூன்று வருடங்களுக்கு ஆசிரியராக அமர்ந்திருந்தார். 1896 கல்கத்தா பல்கலைக்கழகத்துப் பட்டதாரியுமானார். 1897 முதல் 1909 வரை உதயதாரகைப் பத்திரிகையின் ஆசிரியராகவும் விளங்கினார்.

1910 ஆம் ஆண்டில் தோன்றிய ஆலிஸ் வால் நட்சத்திரம் பற்றி வானியல் ஆராய்ச்சி செய்து பின் நிகழக்கூடிய சங்கதிகளை வெளிக்காட்டியமையால் 12.01.1922 இல் இலண்டன் F.R.A.S. என்ற சங்கத்தின் மகிமை அங்கத்தவராகச் சேர்க்கப்பட்ட முதல் இலங்கை மகன் என்ற பெருமைக்குரியவராவார். இவர் வானநூல் வல்லுனராகையால் வானாதிசயங்கள் என்னும் நூலை எழுதியுள்ளார். மது விலக்குக்கும்மி, கிறீஸ்தவ தேவாரங்கள், கீர்த்தனங்களையும் பாடியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 301-302