ஆளுமை:ஆறுமுகத்தம்பிரான்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:23, 30 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகத்தம்பிரான்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகத்தம்பிரான் தமிழ்நாடு, கருவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், எழுத்தாளர். யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலரிடத்தே இலக்கண இலக்கியங்களைக் கற்ற இவர் வண்ணார்பண்ணை பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மீளவும் தமிழ்நாட்டுக்குச் சென்று திருவண்ணாமலை ஆதீனத்தில் சேர்ந்து கொண்டார்.

தலயாத்திரைகள் செய்த இவர் 1836 இல் ஞானமுழுக்குப்பெற்று வெஸ்லி ஆபிரகாம் என்னும் பெயருடன் சமயப்பணியாற்றினார். இக்காலத்தே அஞ்ஞானக்கும்மி, அஞ்ஞானம், இரட்சகர் அவதாரம், செகவுற் பத்தி, நரகம், மோட்சம், வாழ்த்து போன்ற நூல்களை இவர் எழுதினார். இவை 1878 ஆம் ஆண்டு சென்னை கிறிஸ்தவ சங்கத்தால் வெளியிடப்பட்டது. மதமாற்றத்துக்கு முன்பதாக பெரிய புராணத்திற்கு நுட்பமான உரையை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 228-229
  • நூலக எண்: 963 பக்கங்கள் 22