ஆளுமை:இராஜமணி, சிங்கராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜமணி
தந்தை உருத்திராபதி
பிறப்பு 1930.03.06
ஊர் யாழ்ப்பாணம்
வகை பெண் கலைஞர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜமணி, சிங்கராஜா (1930.03.16) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் பிறந்த இசைக்கலைஞர். தந்தை உருத்திராபதி நாதஸ்வர வித்துவான் ஆவார். வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைக் கற்றார். இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் நியமனம் பெற்றுப் பல சேவைகளையாற்றியுள்ளார். 1948ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகளில் சித்திபெற்றார். 1953ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிருந்தகானலயா என்ற இசைப் பாடசாலை ஒன்றினை நிறுவி வாய்ப்பாட்டிசை, வயலின், வீணை ஆகிய கலைத்துறைகளில் மாணவர்களை உருவாக்கினார். வாய்ப்பாட்டிசை, வயலின், வீணை ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினார் இராஜமணி சிங்கராஜா.