ஆளுமை:இராஜலக்சுமி, திலகநாதன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:00, 30 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜலக்சுமி, திலகநாதன்
தந்தை கனகசபை
பிறப்பு
ஊர் கைதடி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜலக்சுமி, திலகநாதன். யாழ்ப்பாணம், கைதடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகசபை. இவர் இணுவில் தமிழ்க் கலவன் பாடசாலை, நாவற்குழி மகா வித்தியாலயம், மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் இரண்டு ஆண்டுகள் தனது உயர் கல்வியைக் கற்று சுவிற்சலாந்தில் குடியேறினார். அங்கு சென்னை மாணவர் மன்றமும், மலேசியத் தமிழ் இலக்கியக் கழகமும் இணைந்து நடாத்திய தமிழ்மணிப் புலவர் பட்டப்படிப்பில் மூன்றாண்டுகள் படித்து தமிழ்மணிப் பட்டம் பெற்றார்.

புகலிடத்தில் தமிழிலக்கியத்துறையில் பணியாற்றிவரும் இவர், சுவிற்சலாந்து லுசெர்ன் தமிழ்மன்ற பாடசாலையிலும், நூர்ன்பேர்க் தமிழாலயத்திலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் நூர்ன்பேர்க் தமிழ்ப் பாடசாலையை நிறுவி நடாத்திவருகின்றார். 1994 ஆம் ஆண்டு பாரிஸ் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் விடியலைத் தேடும் பெண்புறா என்ற சிறுகதையை எழுதிப் பரிசு பெற்றார். லண்டன் ரி. பி. சி வானொலியில் கவிதைகள், இசையும் கதையும் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 91-92