ஆளுமை:சந்திரிகா, சுப்ரமண்யன்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:51, 10 ஜனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (படைப்புகள்)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரிகா
தந்தை சோமசுந்தரம்
தாய் மீனாம்பாள்
பிறப்பு 1958.11.29
இறப்பு -
ஊர் கொழும்பு
வகை ஊடகவியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரிகா, சுப்ரமண்யன் (1958.11.29) கொழும்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சோமசுந்தரம்; தாய் மீனாம்பாள். கொழும்பு மகளிர் கல்லூரியில் கல்வியைக் கற்றார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்திலும், அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திலும், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்திலும், மக்குவாரி பல்கலைக்கழகம், வுல்லாங்காங் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்துள்ளார் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன். 1978ஆம் ஆண்டு ஊடகத்துறைக்கு பிரவேசித்துள்ளார். இதழியல் மற்றும் தொடர்பியல் துறையிலும், சட்டத் துறையிலும் அவுஸ்திரேலியாவில் ஆய்வுப்பட்டம் பெற்று சுமார் முப்பது ஆண்டு காலத்துக்கு மேலாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி துறைகளில் ஊடகவியலாளராக ஈடுபட்டு வருகிறார். எண்பதுகளில் எம்ஜீஆர் அவர்களின் "தாய்" பத்திரிகையில் நிருபராகத் தொடங்கி பத்திரிகையாளராக இலங்கை வீரகேசரியில் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். சந்திரிகா சுப்ரமண்யம் தற்போது இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் தலைமைத்துவம், ஊடகம், கல்வி மற்றும் ஆய்வு தொடர்பான நவீன தலைப்புகளில் பயிலரங்குகளை நடத்தி வருகிறார். அயல் நாட்டில் ஆற்றிய தமிழ் தொண்டுக்காக 2018ஆம் ஆண்டில் தமிழக அரசின் உலகத் தமிழ்ச் சங்க தமிழ் அறிஞர் விருதும், 1988ஆம் ஆண்டில் மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும் என்ற நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதும் பெற்றவர். பதிப்புத்துறையில் கணினியை பயன்படுத்துவது தொடர்பாக ஜப்பானில் நடத்திய சர்வதேச பயிற்சிப் பட்டறையில் யுனெஸ்கோ புலமைப் பரிசில் பெற்றுள்ளார். கணினித் துறையில் மைக்ரோசொஃப்ட் மென்பொருள் திறமையாளர் மற்றும் பயிற்சியாளர் அங்கீகாரம் பெற்று பணியாற்றியுள்ளார். சென்னை, மதுரை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இதழியல் கற்பித்தவர் தற்போது மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் சட்டம் போதிக்கின்றார். இலங்கை, மலேசியா மற்றும் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் இதழியல் பயிற்சி வகுப்புக்களை நடாத்தி வருகிறார். 25 நூல்களை ஊடகம், தமிழ், ஆன்மீகம், சட்டம், கணினி ஆகிய துறைகளில் எழுதி இருக்கிறார். சிட்னி முருகனின் மீது எழுதிய திருப்பள்ளி எழுச்சி முதலாகத் தொடங்கி தாலாட்டில் முடியும் ஏழு பாடல்கள் இசைத் தட்டாக வெளியிட்டுள்ளார். அகதிகள் தொடர்பான சட்டத்துறை ஆய்வுக்காக 2004இல் பட்டர்வேர்த் விருதும், சட்ட பணிக்காக மூன்று விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். • Woman of the West Commended Award 2012 University of Western Sydney • Highly commended Award 2011 – Women Lawyers Association • Nominee 2009 Justice Medal

குறிப்பு : மேற்படி பதிவு சந்திரிகா, சுப்ரமண்யன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும் 1987
  • இன்றைய இதழியல்
  • அபிவிருத்தி இதழியல்
  • தென்னகத் திருக்கோயில்கள்
  • இலங்கைத் தெனாலிராமன் கதைகள்
  • கற்பக விநாயகர்
  • சிறுவர்களுக்குக் கணினி
  • சூரிய நமஸ்காரம்
  • இந்திய ரஷ்ய உறவு - ஒரு பார்வை
  • பெருமைக்குரிய பெண்கள்
  • முதல் மொழி தமிழ் - Mother Tongue Tamil – Bilingual
  • தில்லை என்னும் திருத்தலம்
  • Lord of Dance
  • அம்மா
  • AMMA - A Fallen Star and Failed Politician
  • இணையக் குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும்
  • கொசு மாமா வீட்டு பாயாசம்
  • Mozzie’s Pudding
  • Hand book for Journalists
  • Media Laws in India
  • Digital Journalism
  • சிறுவர் பாதுகாப்பு
  • தமிழக நாணயவியலின் தந்தை ஆர்கே
  • Murugan the Universal God

வெளி இணைப்புக்கள்