ஆளுமை:ஜெகதீஸ்வரி, நாதன் (தம்பிலுவில் ஜெகா)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெகதீஸ்வரி, நாதன் (தம்பிலுவில் ஜெகா)
தந்தை சபாரெத்தினம்
தாய் நாகமணி
பிறப்பு 1960.04.23
ஊர் தம்பிலுவில், அம்பாறை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிலுவில் ஜெகா எனும் புனை பெயருடைய ஜெகதீஸ்வரி நாதன் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தம்பிலுவில் கிராமத்தில் சபாரெத்தினம், நாகமணி தம்பதியரின் மகனாக 1960 ஏப்ரல், 23ல் பிறந்தார். கலைமாணி பீ.ஏ. பட்டதாரியான இவர் ஆசிரியையாக பணி புரிந்தவர் என்பதோடு ஈழத்துக் கவிஞருமாவார்.

கவிக்கோகிலம் என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இவர் தனது 12 வது வயதில் 'அன்னை" எனும் கவிதை மூலம் எழுதத் தொடங்கினார். 1972 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 'சிறுவர் மலர்’, 'பூவூம்பொட்டும்’, 'வாலிபர் வட்டம்’, 'ஒலிமஞ்சரி’, 'இளைஞர் மன்றம்’ போன்ற வானொலி நிகழ்ச்சியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாயின.

'கோகிலம்" சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்த இவரின் கவிதைகள் கோகிலம், காற்று, தூது, இந்துமதி, இதயசங்கமம், நிறைமதி போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்ததுடன் பெண் சஞ்சிகையில் தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கிறது.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 150


வெளி இணைப்பு