ஆளுமை:நிலாந்தி, சசிகுமார்

From நூலகம்
Name நிலாந்தி
Pages வல்லிபுரம்
Pages நவமணி
Birth 1984.11.17
Pages -
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிலாந்தி வள்ளிபுரம் (1984.11.17) மட்டக்களப்பில், பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை வள்ளிபுரம்; தாய் நவமணி. தனது 19ஆவது வயதில் எழுத்துத்துறையில் பிரவேசித்த நிலாந்தி மட்/புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி கற்றுள்ளார். ஆரம்பத்தில் அந்திநிலா என்ற புனைப்பெயருடன் கவிதைகள் எழுதி வந்துள்ளார். ஆனால் இவரின் ஒரு கவிதை மட்டுமே பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதன் பின்னர் 2003 தொடக்கம் 2018 ஜனவரியில் இவர் எழுதிய கவிதைகளைச் சேகரித்து "முற்றுப் பெறாத கவிதைகள்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

அதன் பின்னர் இவரின் கவிதைகளை "தமிழர் தளம்,வலம்புரி,தாயகம் போன்ற பத்திரிகைகளுக்கும் ஜீவநதி,கலைமுகம்,செங்கதிர் போன்ற சஞ்சிகைகளில் பிரசுரமாக ஆரம்பித்தன. அந்திநிலா என புனைப்பெயர் வைத்திருந்தாலும் நிலாந்தி சசிகுமார் என்ற தனது சொந்தப் பெயரிலேயே இவர் அறியப்படுகிறார். அத்துடன் பத்திரிகைகளுக்கு நூல் அறிமுகக் குறிப்பு, நூல் விபரணக் குறிப்பு என்பனவும் எழுதி வருகிறார். அத்துடன் பட்டிமன்ற பேச்சாளரும் கூட. "கா" கலை இலக்கிய சஞ்சிகையின் உறுப்பினரும் ஆவார். மேலும் சிறுகதைகள் சிலவும் எழுதி எழுதியுள்ளார். அறநெறி ஆசிரியரான இவர் ஒரு தனியார் வங்கியின் காப்புறுதி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு நிலாந்தி வல்லிபுரம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்