"ஆளுமை:முருகானந்தம், கதிரைவேற்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=முருகானந்தம், கதிரைவேற்பிள்ளை|
+
பெயர்=முருகானந்தம்|
 
தந்தை=கதிரைவேற்பிள்ளை|
 
தந்தை=கதிரைவேற்பிள்ளை|
 
தாய்=பரமேஸ்வரி|
 
தாய்=பரமேஸ்வரி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
க. முருகானந்தம் (1948.03.27 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வியாபாரிமூலையைச் சேர்ந்த எழுத்தாளர், மருத்துவர். இவரது தந்தை கதிரைவேற்பிள்ளை; தாய் பரமேஸ்வரி. இவர் மேலைப் புலோலி சைவ பாலிகா பாடசாலை, மேலைப்பு லோலி சைவப்பிரகாச வித்தியாசாலை, ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 1975 ம் ஆண்டு (M.B.B.S) பட்டமும், 2003 ம் ஆண்டில் குடும்ப வைத்திய துறையில் டிப்ளோமா (DFM) பட்டமும் பெற்றார். 1975ஆம் ஆண்டு முதல் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றி பின்னர் 1980ஆம் ஆண்டு முதல் குடும்ப வைத்தியராகப் பணியாற்றினார்.
+
முருகானந்தம், கதிரைவேற்பிள்ளளை (1948.03.27 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வியாபாரிமூலையைச் சேர்ந்த எழுத்தாளர், மருத்துவர். இவரது தந்தை கதிரைவேற்பிள்ளை; தாய் பரமேஸ்வரி. இவர் மேலைப் புலோலி சைவ பாலிகா பாடசாலை, மேலைப்பு லோலி சைவப்பிரகாச வித்தியாசாலை, ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 1975 ம் ஆண்டு (M.B.B.S) பட்டமும், 2003 ம் ஆண்டில் குடும்ப வைத்திய துறையில் டிப்ளோமா (DFM) பட்டமும் பெற்றார். 1975ஆம் ஆண்டு முதல் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றி பின்னர் 1980ஆம் ஆண்டு முதல் குடும்ப வைத்தியராகப் பணியாற்றினார்.
  
 
இலங்கையின் அனைத்து முக்கிய தமிழ் பத்திரிகைகளிலும் இவரது நலவியல் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மல்லிகை, ஞானம், சிரித்திரன், ஆதவன், நான்காவது பரிமாணம் போன்ற பல சஞ்சிகைகளில் சிறுகதைகளையும், விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளில் நீண்ட காலம் நலவியல் நிகழ்ச்சிகளை இவர் நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையின் அனைத்து முக்கிய தமிழ் பத்திரிகைகளிலும் இவரது நலவியல் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மல்லிகை, ஞானம், சிரித்திரன், ஆதவன், நான்காவது பரிமாணம் போன்ற பல சஞ்சிகைகளில் சிறுகதைகளையும், விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளில் நீண்ட காலம் நலவியல் நிகழ்ச்சிகளை இவர் நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.

05:16, 28 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் முருகானந்தம்
தந்தை கதிரைவேற்பிள்ளை
தாய் பரமேஸ்வரி
பிறப்பு 1948.03.27
ஊர்
வகை மருத்துவர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகானந்தம், கதிரைவேற்பிள்ளளை (1948.03.27 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வியாபாரிமூலையைச் சேர்ந்த எழுத்தாளர், மருத்துவர். இவரது தந்தை கதிரைவேற்பிள்ளை; தாய் பரமேஸ்வரி. இவர் மேலைப் புலோலி சைவ பாலிகா பாடசாலை, மேலைப்பு லோலி சைவப்பிரகாச வித்தியாசாலை, ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 1975 ம் ஆண்டு (M.B.B.S) பட்டமும், 2003 ம் ஆண்டில் குடும்ப வைத்திய துறையில் டிப்ளோமா (DFM) பட்டமும் பெற்றார். 1975ஆம் ஆண்டு முதல் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றி பின்னர் 1980ஆம் ஆண்டு முதல் குடும்ப வைத்தியராகப் பணியாற்றினார்.

இலங்கையின் அனைத்து முக்கிய தமிழ் பத்திரிகைகளிலும் இவரது நலவியல் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மல்லிகை, ஞானம், சிரித்திரன், ஆதவன், நான்காவது பரிமாணம் போன்ற பல சஞ்சிகைகளில் சிறுகதைகளையும், விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளில் நீண்ட காலம் நலவியல் நிகழ்ச்சிகளை இவர் நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அனுபவக் குறிப்புகள், டொக்டரின் டயறியிலிருந்து (சிரித்திரன் 1986-87), டொக்டரின் கிறுக்கல்கள் (மல்லிகை), வைத்திய கட்டுரைகள் (வீரகேசரி, தினகரன், முரசொலி, ஈழநாடு, ஈழநாதம், தினக்குரல், இருக்கிறம், ஜீவநதி), நலவியல் பத்தி எழுத்துக்கள் வைத்திய கலசம் (முரசொலி), ஹாய் நலமா (தினக்குரல்), இலக்கிய கட்டுரைகள் (மல்லிகை, ஞானம், ஆதவன்) ஆகியன இவரது படைப்புக்களாகும். ரூபவாஹினியில் (EYE Channal) பல வருடங்களாக ஞாயிறு தோறும் நலவியல் நிகழ்ச்சியையும், சக்தி தொலைக்காட்சியில் பல நலவியல் உரைகளையும், இலங்கை வானொலியின் தேசிய ஒலிபரப்பில் நலமாக வாழ்வோம் நிகழ்ச்சியையும் இவர் படைத்துள்ளார்.

சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர், தாயாகப் போகும் உங்களுக்கு, எயிட்ஸ், பாலியல் நூல்கள், போதையைத் தவிருங்கள், வைத்திய கலசம், நீங்கள் நலமாக, எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள், நீரிழிவுடன் நலமாக வாழுங்கள், சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு, கொலஸ்டரோல் கட்டுப்படுத்துவது எப்படி, உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள் போன்ற நலவியல் நூல்களையும், டொக்டரின் டயறியிலிருந்து, மறந்து போகாத சில ஆகிய இலக்கிய நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

இவரது ஆளுமைகளுக்கு இலங்கை தேசிய சாகித்திய விருது, யாழ் இலக்கிய வட்டப் பரிசு, கொழும்பு பல்கலைக் கழக தமிழ் சங்கத்தினர் சிறந்த தமிழ் வலைப் பதிவாளருக்கான விருது ஆகிய விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

க. முருகானந்தம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 07-09
  • நூலக எண்: 6572 பக்கங்கள் 132-135