"ஆளுமை:யாமினி, சிவராமலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 25: வரிசை 25:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]

14:20, 29 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாமினி
தந்தை சிவராமலிங்கம்
தாய் சிவநேசமணி
பிறப்பு 1969.09.03
இறப்பு -
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யாமினி சிவராமலிங்கம் (பிறப்பு: 1969.09.03) அவர்கள் வவுனியாவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவராமலிங்கம்; தாய் சிவநேசமணி. தனது ஆரம்பக்கல்வியை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலும், பின்னர் வவுனியா மகாவித்தியாலயத்திலும் கற்றார். யாமினி சிவராமலிங்கம் 1983ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்தார். 1984ஆம் ஆண்டு நிலவே நீ மயங்காதே (நாவல்) வெளியீட்டின் மூலம் வவுனியா மாவட்டத்தில் முதல் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் யாமினி சிவராமலிங்கத்திற்கு உண்டு. கவிதை, சிறுகதை என ஈழத்து இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இவர் செய்து வருகிறார்.அம்பாளுக்காகவும் விநாயகருக்காகவும் எழுதப்பட்ட `சக்திப்ரதாயினி', 'யாதுமாகி நின்றாய்' ஆகிய இரு பக்திக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். வவுனியா இலக்கிய மலரான "கலைமருதத்தில்" பிரசுரமாகிய "தாலி" என்ற சிறுகதையில் விதவைப் பெண்களை ஒதுக்கி வைக்கின்ற இந்தச் சமூகத்தின் மீதான தனது கோபத்தை வெளிக்காட்டியுள்ள எழுத்தாளர், `துவாரகா' என்கிற சிறுகதையில் மதவெறியைச் சாடியிருக்கிறார்.தனது எழுத்தின் ஊடாக பெண் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் சமூகத்தால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார் யாமினி சிவராமலிங்கம். கலாசார பேரவையினால் நடத்தப்பட்ட போட்டியில் இவரது அமாவாசை நாட்கள் குறுநாவல் அகில இலங்கை ரீதியாக முதற் பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 13 வருட காலம் அரச திணைக்களத்தில் கடமையாற்றிய இவர் உளவளத்துணையாளரானதும் உணர்வுக் குவியல்களாகவுள்ள மனிதர்களுடன் பணியாற்றுவதில் ஆர்வம் ஏற்பட்டமையால் அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் முற்போக்குசிந்தனைனொண்ட தனது எழுத்துப் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

படைப்புக்கள்

வெளி இணைப்புக்கள்