பகுப்பு:அறிவு

From நூலகம்

'அறிவு' இதழ் ஞானாம்பிகை ஸ்தாபனத்தாரின் வெளியீடாக கிழக்கிலங்கை திருகோணமலையிலிருந்து வெளிவந்த சமய அறிவியல் இதழ் ஆகும். இவ் இதழ் 1979இல் திருமதி செந்தில் குணச்சந்திரன் அவர்களை ஆசிரியராக கொண்டு கையெழுத்துப்பிரதியாக வெளிவந்தது. பின்னர் 1988இல் ஜெயசந்திரன் ஜெயமயூரன் அவர்களை ஆசிரியராக கொண்டு அச்சில் வெளிவந்து 3தழ்களுடன் தடைப்பட்டு 2000ஆம் ஆண்டு மீள ஆரம்பிக்கப்பட்டு இருமாத இதழாக வெளிவந்தது. உள்ளடக்கத்தில் மாணவர்களுக்கு ஏற்றதான அறிவியல், சமயம், இலக்கியம், புனைவு சார்ந்த ஆக்கங்களைத்தாங்கி வெளிவந்தது.