பேச்சு:அ. முத்துலிங்கம் கதைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மயூரன் இந்த வார்ப்புரு நன்றாக இருக்கிறது.கூடவே நூல் பற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் சேர்த்து விடலாம்.புதிதாக நூல் விபரம் ஒன்றை உள்ளிடுவது எப்படி,நூல் ஒன்றை இணைப்பது எப்படி போன்றவற்றை விளக்கி உதவிப் பக்கம் ஒன்றை உருவாக்கினால் என்ன?--Eelanathan 18:31, 3 செப்டெம்பர் 2007 (MDT)


தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஆசிரியரின் 77 சிறுகதைகள் இப்பெருந்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை புலம்பெயர்ந்த நாடிழந்த ஒருவரின் கதைகள். இவரது ஆக்கங்களில் இவ்வேக்கம், தவிப்பு வெளிவருவதில்லை. ஆனால் அவரது சகல கதைகளினதும் அடிநாதமாக இந்த மனநிலை புதையுண்டு கிடக்கின்றது. புலம்பெயர்ந்து வாழ்வதால் எதிர்கொள்ளும் இழப்புக்களின் ஈடுகட்டலாக இவரது கதைகளில் மொழியின் மீதான இம் மீள்பயணம் நிகழ்கின்றது. யூதர்கள் இரண்டாயிரம் வருடம் தங்கள் நிலத்தை மொழியில் சுமந்துதான் உலகமெல்லாம் அலைந்தார்கள். மண்ணும் தேசமும் விதைவடிவில் இக்கதைகளில் கருக்கட்டியுள்ளன. யூதர்கள் தம் மொழியை நட்டுத் தம் தேசத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் உருவாக்கியது போல, முத்துலிங்கத்தின் கதைகளுக்குள் உலர்ந்து நீளுறக்கத்தில் மூழ்கிய விதைகள் ஒரு மழையில் முளைத்துக் காடாக மாறமுடியும்.


பதிப்பு விபரம் அ.முத்துலிங்கம் கதைகள். அ.முத்துலிங்கம். சென்னை 14: தமிழினி பதிப்பகம், 342 டி.டி.கே.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (சென்னை 5: மணி ஆப்செட்) 774 பக்கம், விலை: இந்திய ரூபா 350., அளவு: 22*15 சமீ.

-நூல் தேட்டம் (# 2580)