ஆளுமை:அஹ்மது பதுர்தீன், முஹம்மது ஸாலிஹ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஹ்மது பதுர்தீன்
தந்தை முஹம்மது ஸாலிஹ்
பிறப்பு 1956,.04.27
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஹ்மது பதுர்தீன், முஹம்மது ஸாலிஹ் (1956.04.27 - ) மாத்தறை, வெலிகமையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை முகம்மது ஸாலிஹ். வெலிகம மாத்தறை அறபா தேசியக் கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் கல்வி கற்றார். பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் வெலியடி மாத்தறை ஸாஹிரா மஹா வித்தியாலயத்தின் ஆசிரியராகக் கடமையாற்றி வந்துள்ளார்.

இவர் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் பாடல்கள், வானொலி நாடகம், மொழிபெயர்ப்புக் கதைகள், உருவகக் கதைகள், விமர்சனம் போன்ற பல துறைகளில் பங்களிப்புச் செய்து வருகின்றார். இவரது முதலாவது ஆக்கம் 1975 ஆம் ஆண்டு தினகரன் புதுக்கவிதைப் பூங்காவில் என்னே விருந்து என்னும் தலைப்பில் இடம்பெற்றது. இவர் எழுதியுள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் தினகரன், வாரமஞ்சரி, அல்ஹசனாத், கலையமுதம், அறிவமுதம் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 44-46