ஆளுமை:இராஜமனோகரி, புலேந்திரன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:10, 5 நவம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜமனோகரி
தந்தை துரைராஜா
பிறப்பு 1949.02.07
ஊர் வண்ணார்பண்ணை
வகை பெண் ஆளுமைகள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜமனோகரி, புலேந்திரன் (1949.02.07) யாழப்பாணம் வண்ணார்ப்பண்ணையில் பிறந்த பெண் ஆளுமை. இவரின் தந்தை துரைராஜா யாழ்ப்பாணத்தின் தமிழ்க் காங்கிரஸின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பங்களிப்புச் செய்தவர். யாழ்ப்பாண மாநரக சபையின் மாநகராதிபதியாக நீண்டகாலம் இருந்தவர். யாழ் மாநகர செயற்பாடுகள் தமிழில் நடைபெற வேண்டுமென்பதிலும் உறுதியாக இருந்தவர். இவரின் கணவர் கே. டி. புலேந்திரனும் வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராகவும், வவுனியா நகர மன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர்களைத் தொடர்ந்து இராஜமனோகரியும் அரசியல் ஈடுபட்டார். வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

இராஜமனோகரி, புலேந்திரன் இன, மத, மொழி பராமல் சேவையாற்றினார். வவுனியாவில் கல்வி வளர்ச்சிக்காக ஒரு கல்வியியல் கல்லூரி, இணைக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரி, தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஆடைத் தொழிற்சாலைகள், சுய தொழில் செய்பவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து உதவிகள் வழங்கல் போன்றவற்றை செய்ததோடு இளைஞர்கள் தொழிற்பயிற்சி பெறுவதற்கான இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாடு என வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். இராஜாங்க அமைச்சராக சிறிது காலம் பணியாற்றிய போதும் தமிழ்க்கல்வி, தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளார். பொதுத்தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்ற முதலாவது தமிழ்ப் பெண் இராஜமனோகரி புலேந்திரன் ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், கல்விக்கான இராசாங்க அமைச்சராகப் பணியாற்றியவருமாவார் இராஜமனோகரி புலேந்திரன்.