பகுப்பு:செங்கதிர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'செங்கதிர்' கிழக்கிலங்கையில் இருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய பண்பாட்டுப் பல்சுவை மாத இதழ் ஆகும். 2008ஆம் ஆண்டு தை மாதம் இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் திரு.த.கோபாலகிருஷ்ணன் (செங்கதிரோன்).

திறந்த பொருளாதாரமும் உலகமயமாதலும் பண்பாட்டுத் தனித்துவங்களை பாதித்து வருகின்ற சூழலில் மனித மனங்களை செழுமைப்படுத்தும் வல்லமை இலக்கியங்களுக்கு உண்டு என்பதை எடுத்தியம்பும் வகையில் மரபுகளில் காலூன்றி நின்று புதுமையை நோக்குவதாக இச் சிற்றிதழ் அமைந்துள்ளது. ஒவ்வொரு இதழிலும் அதிதிப்பக்கம் ஊடாக துறைசார் பிரபலங்கள் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். நீத்தார் நினைவுகள், இலக்கிய கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், எழுத்தாளர் அறிமுகம், இலக்கிய நிகழ்வு பற்றிய பதிவுகள், எழுத்தாளர் வாழ்க்கைக் குறிப்பு, நூல் விமர்சனம் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளது.

தொடர்புகளுக்கு:-செங்கதிரோன், திரு.த.கோபாலகிருஷ்ணன், 19,மேல்மாடித் தெரு,மட்டக்களப்பு. T.P:- 0094-65-2227876, 0094-77-2602634 E-mail:-Senkathirgopal@gmail.com

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:செங்கதிர்&oldid=157382" இருந்து மீள்விக்கப்பட்டது