ஆளுமை:குணரெத்தினம், செ.

From நூலகம்
Name குணரெத்தினம்
Birth 1942.06.05
Pages 2002.06.15
Place மட்டுக்கழி, மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணரெத்தினம், செ. (1942.06.05 - 2002.06.15) மட்டக்களப்பு, மட்டுக்கழியைச் சேர்ந்த எழுத்தாளர். அமிர்தகழியான் புனைபெயரைக் கொண்ட இவர், சிறுவயதில் அமிர்தகழியிலும் பின்னர் அரசடி மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்று எஸ்.எஸ்.சி. சித்தி எய்திய பின் பல்வேறு தொழில்கள் பார்த்து ஈற்றில் வாழைச்சேனை காகித ஆலையில் நீண்டகாலம் இலிகிதராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார். இவர் சுமார் 750 கவிதைகள், 300 மெல்லிசைப் பாடல்கள், 150 நகைச்சுவைக் கட்டுரைகள், 25 இலக்கியக் கட்டுரைகள், 50 வானொலி நாடகங்கள், 50 சித்திரங்கள், 10 நாவல்கள், 200 சிறுகதைகள் முதலியவற்றை இயற்றியுள்ளார்.

இவர் தனது எழுத்துத் துறைகளுக்காக பரிசுகள், பாராட்டுக்கள், விருதுகள் சர்வதேச மட்டத்தில் பெற்றதுடன் இலங்கையில் தேசிய மட்டம், மாவட்டத்தில் இடம்பெற்ற இலக்கியப் போட்டிகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார்.


Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 135-136
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 40-44