ஆளுமை:அகிலேஸ்வரன், சாம்பசிவம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:32, 23 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அகிலேஸ்வரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகிலேஸ்வரன்
தந்தை சாம்பசிவம்
பிறப்பு
ஊர் சரவணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அகிலேஸ்வரன், சாம்பசிவம் யாழ்ப்பாணம், சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சாம்பசிவம். இவர் அகில் என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை, நாவல், ஆன்மீகக் கட்டுரை, நூலாய்வு ஆகிய துறைகளில் தடம் பதித்து வந்துள்ளார். இவரது படைப்புக்கள் இலங்கை, இந்தியா, கனடா ஆகிய நாடுகளில் வெளிவரும் முன்னணிப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. திசை மாறிய தென்றல் என்ற நாவலையும் விரதங்களும் பலன்களும் என்ற சமய நூலையும் மறைபொருள் தத்துவ விளக்கம் என்ற சமய நூலையும் வெளியிட்டுள்ளார். மேலும் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை வெளியிடும் தமிழ் ஆதர்ஸ். கொம். (www.tamilauthors.com) என்ற இணையத்தளத்தை நடத்தி வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4697 பக்கங்கள் 20