ஆளுமை:அசனா லெப்பை, சுலுத்தான் முகியித்தீன்

From நூலகம்
Name அசனா லெப்பை
Pages சுலுத்தான் முகியித்தீன்
Birth
Pages 1918
Place யாழ்ப்பாணம்
Category புலவர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அசனா லெப்பை, சுலுத்தான் முகியித்தீன் ( - 1918) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர், எழுதுவினைஞர். இவரது தந்தை சுலுத்தான் முகியித்தீன். இவர் தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டிருந்தார். இவர் முஸ்லிம் மக்களிடையே முதன் முதலாக அரசாங்க சேவையிற் சேர்ந்து கொண்டவராகக் கருதப்படுகின்றார்.

இவர் குலாம் காதிறு நாவலர் இயற்றிய ஆரிபுநாயகம், நாகூர்ப் புராணம், பிக்குமாலை, திரிமக்கா திரிபந்தாதி ஆகிய நூல்களுக்குச் சாற்றுக்கவி வழங்கியுள்ளார். திருப்புகழ்ப் பாவணி, நவரத்தினத் திருப்புகழ், குதுபு நாயக அனுசாசனம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் குதுபு நாயக அனுசானம் 244 பாடல்களைக் கொண்டதாகும்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 06-07