ஆளுமை:ஆயிஷா, இப்ராஹிம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆயிஷா
தந்தை முஹம்மட் ஷரீப்
தாய் உம்மு றெஜீனா
பிறப்பு 1942.07.02
ஊர் மாவனல்லை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆயிஷா, இப்ராஹிம் (1942.07.02) மாவனல்லை ஹிங்குலோயாவையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மட் ஷரீப்; தாய் உம்மு றெஜீனா. 1963ஆம் ஆண்டு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் பயிற்சி பெற்று 1965ஆம் ஆண்டு கிரிங்கதெனிய பதுரியா பாடசாலையில் ஆசிரியர் நியமனம் பெற்றார். 2002ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். தாம் பிறந்த ஊரான மாவனல்லை பற்றிய வரலாற்றுப் பதிவான ”பொற்கலசம்” எனும் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். எதிர்காலத்திலும் இவ்வாறான ஆய்வு நூலை வெளியிடத் தயாராகி வருகிறார் இதற்குரிய தகவல்களைத் தேடிச் சேகரித்து வருகிறார் ஆயிஷா.

படைப்புகள்

  • பொற்கலசம்

வெளி இணைப்புக்கள்