ஆளுமை:ஆறுமுகம்பிள்ளை, சாமிநாதர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகம்பிள்ளை
தந்தை சாமிநாதர்
தாய் கமலம்
பிறப்பு 1919.05.19
இறப்பு 1993.02.07
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம்பிள்ளை, சாமிநாதர் (1919.05.19 - 1993.02.07) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சாமிநாதர்; தாய் கமலம். இவர் இந்திய நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ஆஸ்தான வித்துவான் ரி.என். ராஜரத்தினம் அவர்களிடம் முறைப்படி குருகுலவாசப் பயிற்சி பெற்றார்.

இவருடைய நாதஸ்வர வாசிப்பானது தனித்துவமுடையதோடு இவருடைய நாதஸ்வரத்தில் வரும் ஒலியானது கிளாரினட் ஷணாய் போன்ற நாத ஒலி வேறுபாடுகளை எடுத்துக்காட்டுவதாய் அமையும். இவர் இலங்கை இந்திய நாதஸ்வரக் கலைஞர்களுடன் சேர்ந்து வாசித்துள்ளார்.

லவிதஸ்வரபூபதி, இசைநாதலயமணி, தேவகான இசைத்திலகம், நாதஸ்வரமஹாவலிகங்கா, நாதஸ்வரவித்வசரப இசை அரசு, பல்லிசைப் புலவர், இசைநாத வாரிதி, ஸாமகானலாவண்ய இசைஞான ஜோதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 54-57