ஆளுமை:ஆறுமுகம், வீ. வீ. கே.

From நூலகம்
Name ஆறுமுகம்
Birth
Place புங்குடுதீவு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம், வீ. வீ. கே. யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த கலைஞர். யாழ்ப்பாணத்தில் வில்லிசையை வளர்த்த முன்னோடிகளில் இவர் முக்கியமானவர். புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நீண்டகாலம் ஆசிரியராகக் கடமையாற்றிய இவருக்கு வில்லிசையும், கதாகாலேட்சபமும் கைவந்த கலைகளாகும்.

இவரே திருப்பூங்குடி என்ற பெயரை முதன் முதலில் புங்குடுதீவுக்குச் சூட்டியவர் ஆவார். வீ. வீ. கே. வில்லிசைக்குழு என்ற பெயரில் வில்லிசைக் குழுவொன்றை நீண்ட காலம் நடாத்தி வந்த இவர் இலங்கையில் மட்டுமன்றி இவரது வில்லிசைக் கச்சேரிகள் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 240A-240B