ஆளுமை:இக்பால், கே. எம். எம்.

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:12, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இக்பால்
பிறப்பு 1951.12.10
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இக்பால், கே. எம். எம். (1951.12.10 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயம், மூதூர் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். உபவலயக் கல்வி அலுவலகத்தில் இவர் ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார்.

இவரது முதலாவது கவிதை 1982.09.07 ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் ஒழிந்திடுவாய் என்னும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து தொண்ணூற்றைந்துக்கு மேற்பட்ட கவிதைகளையும், பதினாறுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும், பதினொரு சிறுவர் கதைகளையும், மாணவர்களின் நலன் கருதி நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் முகைதீன் புராணம், 10 ஆம் தரத்திற்கான சமூகக்கல்வி வினாவிடை, 11 ஆம் தரத்திற்கான சமூகக்கல்வி வினாவிடை ஆகிய மூன்று நூல்களையும் எழுதியுள்ளார்.

இவர் கிண்ணியா உபவலயக்கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார். கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் கதைகள், மாணவர்களுக்கான வினாவிடை, இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 166-168
  • நூலக எண்: 11499 பக்கங்கள் 03