ஆளுமை:இரத்தினம், கார்த்திகேசர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:37, 12 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:இரத்தினம், கா. பொ., ஆளுமை:இரத்தினம், கார்த்திகேசர் என்ற தலைப்புக்கு நகர்த்த...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினம்
தந்தை கார்த்திகேசர்
தாய் பத்தினிப்பிள்ளை
பிறப்பு 1914.03.10
இறப்பு 2010.12.20
ஊர் வேலணை
வகை அரசியல் தலைவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினம், கார்த்திகேசர் (1914.03.10 - 2010.12.20) யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியல் தலைவர். இவரது தந்தை கார்த்திகேசர்; தாய் பத்தினிப்பிள்ளை. ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையில் பூர்த்திசெய்த இவர் 1929இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் சேர்ந்துகொண்டார். பயிற்சியை நிறைவு செய்ததும் தான் பயின்ற பாடசாலையிலேயே ஆசிரியராக பணி ஏற்றார்.


பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களுடன் இவருக்கிருந்த தொடர்பினால் கவிபுனையும் ஆற்றலை அவரிடமே பயின்றார். 1933இல் பண்டிதர் பட்டமும், 1942இல் வித்துவான் பட்டமும், 1945ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் இளநிலை கலை பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் 1952இல் கீழைத்தேய மொழிகளில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் உதவி ஆசிரியராகவும், படசாலைகளுக்கான ஆய்வு அலுவலகராகவும், தமிழ் ஆசிரியராகவும்,ஆரம்பத்தில் இவர் கடமையாற்றினார். அதுமட்டுமல்லாமல் இவர் அரசியலிலும் இலங்கை தமிழரசு கட்சியில் இணைந்து 1965 ஆம் ஆண்டு கிளிநொச்சி தேர்தல் தொகுதியிலும் 1970 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுமட்டுமல்லாமல் 1977இல் ஊர்காவற்துறை தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். பல ஆண்டுகள் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணை தலைவராகவும், பின் தலைவராகவும், துணைக் காப்பாளராகவும் இருந்து சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார். எழுத்துலகில் இவர் தமிழ் இலக்கியம் கற்பித்தல், தமிழ் உணர்ச்சி, உரை வண்ணம் போன்ற பல நூல்களையும் வெளியுட்டுள்ளார். இவர் தமிழ் மறைக் காவலர், திருக்குறள் செல்வர், குறள் ஆய்வுச் செம்மல், செந்தமிழ்க் கலைமணி, உலகத் தமிழர் செம்மல் போன்ற பல பட்டங்களை பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடதக்கது.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 492-506