ஆளுமை:இராசதுரை, அமரசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசதுரை
தந்தை அமரசிங்கம்
பிறப்பு 1938.05.11
ஊர் தையிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இராசதுரை, அமரசிங்கம் (1938.05.11 - ) யாழ்ப்பாணம் தையிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அமரசிங்கம். 1960களிலிருந்து வீரகேசரி, தமிழன், ஈழமுரசு, ஈழநாடு, சஞ்சீவி போன்ற இதழ்களில் எழுதிவருகிறார். இவர் கண்ணாடி, கொந்தல், சமநீதி, மண்பாய்ந்தவெளி, ஒளிமயமான தீபம், கோச்சிவரும் கவனம், அம்மாவின் பெயர் அம்மா, குழாயடிச் சண்டை, தவிலும் தாளமும், எழுத்தறிவித்தவன் இறைவன், அவன் பெயர் மிருதங்கம், இரவல், அகதி அரசி, மின்சாரமும் சம்சாரமும், கொழும்புக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டேன், இதுக்கெல்லாம் ஐயா, வெள்ளைப்பூனை உட்பட பல சிறுகதைகளை எழுதியுள்ளார். 2006இல் அகதி அரிசி என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 184-185
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 02