ஆளுமை:இராசநாயகம், செல்லப்பாபிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:56, 19 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசநாயகம்
தந்தை செல்லப்பாபிள்ளை
பிறப்பு 1870.10.22
இறப்பு 1940.01.17
ஊர் நவாலி
வகை வரலாற்றாய்வாளர், புலவர், மொழிபெயர்ப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசநாயகம், செல்லப்பாபிள்ளை (1870.10.22 - 1940.01.07) நவாலியைச் சேர்ந்த புலவர், மொழிபெயர்ப்பாளர். இவரது தந்தை செல்லப்பாபிள்ளை. இவர் கொழும்பிலுள்ள அர்ச்.தோமாசுக் கல்லூரியில் கல்வி பயின்று 1889 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கச் சேவையில் எழுதுவினைஞராகக் கடமையாற்றினார். 1920 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்திற்கு மூன்றாம் துணைப் பதிவாளராக உயர்வு பெற்று முதலியார் எனும் சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். 1923 ஆம் ஆண்டு நாட்டாட்சிச் சேவைக்கு உயர்வு பெற்று யாழ்ப்பாணக் கச்சேரியில் அதிகார உத்தியோகத்தராக நியமனம் பெற்று 1929 இல் ஓய்வு பெற்றார்.

பணியாற்றும் காலத்தில் இலங்கையின் வரலாறு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர், பிற மொழியாளரும் யாழ்ப்பாணத்தின் பழம் பெருமைகளை உணர்ந்து கொள்ளுதல் வேண்டுமெனக் கருதி பண்டைக்கால யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்ற பெயருடன் சிறந்த வரலாற்றாராய்ச்சி நூலொன்றினை ஆங்கிலத்தில் இயற்றியதோடு "யாழ்ப்பாண வரலாறு என்னும் நூலினைத் தமிழில் எழுதி இரு பாகங்களாக வெளியிட்டார்.

இவற்றுடன் கதிர்காமம் பற்றிய நூல் ஒன்றினையும் ஆங்கிலத்தில் எழுதியதோடு 35000 வரையான நூல்களின் விபரங்கள் அடங்கிய 'தமிழ்நூற் பெயரகராதி' ஒன்றினையும் தொகுத்துள்ளார். இத்தொகுப்பு சென்னை நூல்நிலைய கழகத்தாரின் வேண்டுகோளின்படி அனுப்பப்பட்டதாக அறியக்கிடக்கின்றது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 38 - 41