ஆளுமை:இராசரத்தினம், அப்பையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசரத்தினம்
தந்தை அப்பையா
பிறப்பு 1946.04.21
ஊர் சில்லாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், அப்பையா (196.04.21 - ) யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை அப்பையா. இவர் மார்க்கண்டு, சி. ஆறுமுகம் ஆகியோரிடம் நாடகக்கலை பயின்றார்.

இவர் இசை நாடகங்கள் பலவற்றைப் பயிற்றுவித்தும், நடித்தும், ஆலயங்களில் பாடல் பாடியும் வந்துள்ளார். புதிய கலைஞர்களுக்கு இசை நாடகம், கூத்து, காவடி போன்றனவற்றைப் பயிற்றுவித்துள்ளார். பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினரிடம் 'மரபுக் கலைச்சுடர்' என்ற பட்டமும் பிரதேச செயலகத்தின் 'கலைஞாயிறு' பட்டமும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 130-131