ஆளுமை:இராசரத்தினம், கணபதி
Name | இராசரத்தினம் |
Pages | கணபதி |
Birth | 1927.01.06 |
Pages | 2004 |
Place | காரைநகர் |
Category | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராசரத்தினம், கணபதி (1927.01.06 - 2004) யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த ஓவியர், நாடக ஆர்வலர், ஆசிரியர். இவரது தந்தை கணபதி. சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியப் பயிற்சி பெற்ற இவர், யாழ்ப்பாணத்தின் முன்னோடி ஓவிய அமைப்பான வின்சர் கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இணைந்தார். திருகோணமலையில் சித்திரப் பாட வித்தியாதிகாரியாகக் கடமையாற்றினார்.
இவரது பிரதிமை ஓவியங்கள் உயிரோட்டமுடைய ஆக்கங்களாகும். பிரதிமை ஓவியம், ஓவியத்தொடுப்பமைவு, நீர்வண்ணப் பிரயோகம் போன்றனவற்றில் இவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். இருபரிமாணச் சட்டத்தில் முப்பரிமாணத்தைக் கொண்டுவரும் இவரது ஓவியங்கள் அனைத்திலும் பச்சைவர்ணப் பிரயோகம் முதன்மை பெறுகிறது. பிரதிமைக்கலை, யோகர்சுவாமிகளும் கிளிநொச்சியும் ஆகியன இவரது நூல்கள். இவர் மெய்யுரு (Portrait) பற்றி நூல் எழுதியுள்ளார். இவரால் வரையப்பட்ட பிரதிமை ஓவியங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர்களான க. கைலாசபதி, பேரா. துரைராசா ஆகியோரது பிரதிமை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கது. .
இவர் ஓவியக் கலையில் தனது குருவாக ஐயாத்துரை நடேசுவை ஏற்றுள்ளார். இவர் 18 ஓவியங்கள் வரை வரைந்துள்ளார். இவற்றில் பிரதிமை ஓவியங்கள், நிலக்காட்சி ஓவியங்களும் அடங்குகின்றன. நூட் மனிதக் காட்டுருக்கள் பற்றிய குறிப்புக்களையும் சேகரித்துள்ளார். இவர் வரைந்த ஓவியங்களில் கிராமத்திற்குத் திரும்பும் வண்டில் (1951 -தைல வர்ணம்), பொதுக் கிணற்றில் குளித்தல் (1959 -தைல வர்ணம்), திருவெம்பாவை (1951 -தைல வர்ணம்) ஆகியவை சிறப்பானவை.
இவர் தமிழ் இலக்கிய விழாவில் ஆளுநர் விருது பெற்றார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
Resources
- நூலக எண்: 2970 பக்கங்கள் 27
- நூலக எண்: 15444 பக்கங்கள் 234