ஆளுமை:இராசரத்தினம், சிதம்பரம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசரத்தினம்
தந்தை சிதம்பரம்பிள்ளை
தாய் சின்னம்மா
பிறப்பு 1916.07.06
ஊர் வேலணை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், சிதம்பரம்பிள்ளை (1916.07.06 - ) அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை சிதம்பரம்பிள்ளை; தாய் சின்னம்மா. இவர் தனது 19ஆவது வயதில் கரம்பன் சிவகுருநாத வித்தியாலத்திலும், வேலணை சரஸ்வதி வித்தியாலயத்திலும் 34 வருடங்கள் சிறந்த ஆசிரியராக மிளிர்ந்த இவர் இளைப்பாறும் போது ஆத்திசூடி வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றினார்.

இவரது சமூக வாழ்க்கை 1944ஆம் ஆண்டு ஆரம்பமானது. இவர் கிராமச் சங்கம், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், போன்ற பல குழுக்களிலும், சங்கங்களிலும் பதவி வகித்தார். கிராமச் சங்க தலைவராக இவர் இருந்த போது நூல் நிலையங்கள் விஸ்தரிக்கப்பட்டு, சந்தைகள் வளமூட்டப்பட்டு, பலநன்னீர் கிணறுகள் வெட்டி மக்களின் நலனுக்காக பங்காற்றியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 328-332