ஆளுமை:இராசையா, அம்பலவாணர்

From நூலகம்
Name இராசையா
Pages அம்பலவாணர்
Birth 1926
Pages 1991
Place யாழ்ப்பாணம்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, அம்பலவாணர் (1926 - 1991) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை அம்பலவாணர். 1945 இல் உணவுற்பத்திப் போதனாசிரியராக ஏழாலை அரசாங்கப் பாடசாலையில் நியமனம் பெற்ற இவர், பின்னர் வெலிமடை அரசினர் பாடசாலையிலும், வேலணை மத்திய மகாவித்தியாலயத்திலும் கடமையாற்றி, 1969 இல் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை ஓவிய விரிவுரையாளராக நியமனம் பெற்று 1972 இல் ஓய்வு பெற்றார்.

வின்ஸர் ஆட்சிகிளப்பின் முதல் மாணவரான இவர், தனது ஆயுட்காலம் முழுவதும் அதனுடன் தொடர்பில் இருந்தார். கொழும்பு கலாபவனத்தில் பல வருடங்கள் அங்கத்தவராக இருந்ததுடன் கலாபவனம் நடத்திய ஓவியக்காட்சிகள் பலவற்றில் பங்குபற்றியுள்ளார். இவர் அதிகமான நிலக்காட்சி ஓவியங்களை வரைந்துள்ளார். இவரது கலைப் பெறுமானமுள்ள ஓவியப் படைப்புக்கள் வின்சர் ஆட்சிகிளப் காலத்திலிருந்து அவர் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக இருந்த காலப்பகுதிக்குரியனவாகும். பிரதிமை ஓவியம், நிலைப்பொருள் ஓவியம், நிலக்காட்சி என்ற முப்பிரிவிலும் தன் ஓவிய ஆளுமையை வெளிப்படுத்திய இவரது ஆக்கங்களில் முதன்மை பெறுவது கோயிற் காட்சிகள் ஆகும்.

Resources

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 28-29