ஆளுமை:இராசையா, பீதாம்பரம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:30, 22 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசையா
தந்தை பீதாம்பரம்
பிறப்பு 1936.03.21
ஊர் குரும்பசிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, பீதாம்பரம் (1936.03.21 - ) யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பீதாம்பரம். கலையரசு சொர்ணலிங்கம், கலைப் பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை ஆகியோரைக் குருவாகக் கொண்டு நாடகக் கலையைக் கற்ற இவர் தனது 14 ஆவது வயதிலிருந்து தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டி வந்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபை, திறந்த வெளியரங்கு, யாழ்ப்பாண வீரசிங்க மண்டபம், தலைநகர் கொழும்பு ஆகிய இடங்களில் இவரது நாடகங்கள் பலமுறை மேடையேற்றப்பட்டுள்ளன.

இவரது திறமைக்காக நடிக மாமணி, நாடகக் குரிசில், சின்னக் கலைவாணர், கலைஞானச்சுடர் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 132