ஆளுமை:இராமநாதன், சொக்கலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமநாதன்
தந்தை சொக்கலிங்கம்
தாய் பிள்ளைச்சி
பிறப்பு
இறப்பு 2014.12.26
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சொக்கலிங்கம், இராமநாதன் ( - 2014.12.26) நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடவாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சொக்கலிங்கம்; தாய் பிள்ளைச்சி. இவர் 30 வருடங்களுக்கு மேலாக கிராம சபையில் பணியாளராகச் சேவை செய்தார்.

கவிதை பாடுவதில் சிறந்த ஆற்றல் கொண்ட இவர், நெடுந்தீவு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத்தின் மீது ஆலமாவனச் சிந்து என்னும் பாடற் தொகுப்பைப் பாடியுள்ளார். கனடாவிலுள்ள நெடுந்தீவைச் சேர்ந்த சைவப் பெருமக்கள் சிலரின் ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஆனி மாதம் நெடுந்தீவிற்குச் சென்று அங்குள்ள ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத்தினைப் புனர்நிர்மாணம் செய்து அவ்வாலயத்தின் கும்பாபிஷேகத்தையும் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 143