ஆளுமை:இராமலிங்க ஐயர், சந்திரசேகர ஐயர்

From நூலகம்
Name இராமலிங்க ஐயர்
Pages சந்திரசேகர ஐயர்
Birth 1649.05.16
Place நல்லூர்
Category சோதிடர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்க ஐயர், சந்திரசேகர ஐயர் (1649.05.16 - ) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகவும் அராலியை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிடர். இவரது தந்தை சந்திரசேகர ஐயர். இவர் தனது 18 ஆவது வயதில்(1667.05.16) வாக்கிய பஞ்சாங்கத்தை முதலில் கணித்து வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழ்மொழியிலும் வடமொழியிலும் வான சாஸ்திரத்திலும் ஆற்றல் பெற்றிருந்தார். பழமொழிப்பிரபந்தம், சந்தான தீபிகை (சோதிட நூல்) ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். சந்தான தீபிகை 1713.01.01 இல் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூலாகும். இது 22 விருத்தப்பாக்களைக் கொண்டது. சரசோதி மாலை என்ற சோதிட நூலை பதிப்பித்துள்ளார். இவர் இராமலிங்க முனிவர் எனவும் அழைக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 106
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 211
  • நூலக எண்: 963 பக்கங்கள் 45