ஆளுமை:இளங்கீரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இளங்கீரன்
பிறப்பு 1927.01.04
இறப்பு 1996.09.12
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளங்கீரன் (1927.01.04 - 1996.09.12) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மலேசியாவில் இனமணிப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த இவர், இலங்கையில் தொழிலாளி, ஜனவேகம் ஆகிய அரசியல் ஏடுகளின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் அரசியல், பொருளாதாரம், சரித்திரம், சமூகப் பிரச்சினைகள், மதம் சார்ந்த கட்டுரைகள் என பலவற்றை எழுதியிருக்கிறார். மேலும் "மனித புராணம்", "வாழப்பிறந்தவர்கள்" போன்ற தொடர் நாடகங்களை இவர் எழுதி, இலங்கை வானொலி தேசியச் சேவையில் ஒலிபரப்பாக்கியுள்ளார். இவர் எழுதித் தயாரித்த மகாகவி பாரதி நாடகம் 1982.12 இலும், 1983.03 இலும் கொழும்பில் மேடையேறியது.

ஓரே அணைப்பு, மீண்டும் வந்தாள், பைத்தியக்காரி, பொற்கூண்டு, கலாராணி, மரணக்குழி, காதலன், அழகு ரோஜா, வண்ணக்குமரி, காதல் உலகிலே, பட்டினித் தோட்டம், நீதிபதி, எதிர்பார்த்த இரவு, மனிதனைப் பார், மனிதர்கள், புயல் அடங்குமா?சொர்க்கம் எங்கே?, மனிதர்கள், இங்கிருந்து எங்கே?, காலம் மாறுகிறது, மண்ணில் விளைந்தவர்கள், அவளுக்கு ஒரு வேலை வேண்டும், அன்னை அழைத்தாள் ஆகிய நாவல்களையும், தென்றலும் புயலும், நீதியே நீ கேள்! , ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும், தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும், பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும் ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இவரது திறமைக்காக இலக்கியச் செம்மலர், விஸ்வப்பிரசாதினி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 89-91
  • நூலக எண்: 10205 பக்கங்கள் 35-38
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 30
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 58-60
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இளங்கீரன்&oldid=193282" இருந்து மீள்விக்கப்பட்டது