ஆளுமை:இளங்கீரன்

From நூலகம்
Name சுபைர் இளங்கீரன்
Birth 1927.01.04
Pages 1996.09.12
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுபைர் இளங்கீரன் (1927.01.04 - 1996.09.12) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர், நாடக விற்பன்னர், திறனாய்வாளர். மலேசியாவில் தினமணிப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த இவர், இலங்கையில் தொழிலாளி, ஜனவேகம் ஆகிய அரசியல் ஏடுகளின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஸ்தாபித்தவர்களில் ஒருவராவார். இவர் அரசியல், பொருளாதாரம், சரித்திரம், சமூகப் பிரச்சினைகள், மதம் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை எழுதியிருக்கின்றார். மேலும் "மனித புராணம்", "வாழப்பிறந்தவர்கள்" போன்ற தொடர் நாடகங்களை இவர் எழுதி, இலங்கை வானொலி தேசியச் சேவையில் ஒலிபரப்பாக்கியுள்ளார். இவர் 1960களின் முற்பகுதிகளில் இலங்கையில் மரகதம் என்னும் கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டார்.

இவர் 1948 இல் எழுத்துலகில் பிரவேசித்து ஓரே அணைப்பு, மீண்டும் வந்தாள், பைத்தியக்காரி, பொற்கூண்டு, கலாராணி, மரணக்குழி, காதலன், அழகு ரோஜா, வண்ணக்குமரி, காதல் உலகிலே, பட்டினித் தோட்டம், நீதிபதி, எதிர்பார்த்த இரவு, மனிதனைப் பார், மனிதர்கள், புயல் அடங்குமா?சொர்க்கம் எங்கே?, மனிதர்கள், இங்கிருந்து எங்கே?, காலம் மாறுகிறது, மண்ணில் விளைந்தவர்கள், அவளுக்கு ஒரு வேலை வேண்டும், அன்னை அழைத்தாள் ஆகிய நாவல்களையும், தென்றலும் புயலும், நீதியே நீ கேள்!, ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும், தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும், பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும் ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். இவர் பாரதி நூற்றாண்டை முன்னிட்டு எழுதித் தயாரித்த மகாகவி பாரதி நாடகம் 1982.12 இலும், 1983.03 இலும் கொழும்பில் மேடையேறியது.

இவரது திறமைக்காக 1992 இல் முஸ்லிம் சமய கலாச்சார ராஜாங்க அமைச்சினால் விருதும், தாஜீல் அதீப் என்ற பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இலக்கியச் செம்மலர், விஸ்வப்பிரசாதினி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 89-91
  • நூலக எண்: 10205 பக்கங்கள் 35-38
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 30
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 58-60