ஆளுமை:இளங்கோவன், புஷ்பராணி

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:38, 10 ஜனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (படைப்புகள்)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஷ்பராணி
தந்தை முத்தையா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளங்கோவன் புஷ்பராணி யாழ்ப்பாணம் சுன்னாகம் ஏழாலையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முத்தையா. தமிழ்ப்பிரியா என்ற புனைபெயரில் எழுதி வருபவர் இளங்கோவன் புஷ்பராணி. 1970ஆம் ஆண்டு சிறுகதையின் ஊடாக எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தார் எழுத்தாளர். சிறுகதை, நாடகம், மெல்லிசைப்பாடல், இசையும் கதையும், கவிதை என பன்முக ஆளுமைகொண்டவர் புஷ்பராணி. வானொலி மற்றும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் புஷ்பராணி இளங்கோவனின் சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள் வெளிவந்துள்ளன. ஈழநாடு, சிந்தாமணி, சுடர், இந்திய சஞ்சிகைகள் இதயம் பேசுகிறது, குங்குமம், மங்கை போன்றவற்றிலும் இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளது. தினகரன், வீரகேசரி, ஈழமுரசு நாளிதழ் மல்லிகை, சிரித்திரன், கலாவல்லி, அமிர்தகங்கை சஞ்சிகைகள் ஆகியவற்றிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. திருமணத்தின் பின்னர் பிரான்ஸ் நாட்டில் கணவர் இளங்கோவனுடன் தற்பொழுது வசித்து வருகிறார். தொடர்ந்தும் இவரது ஆக்கங்கள் வெளிநாடுகளில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளது.

படைப்புகள்

  • காம்பு ஒடிந்த மலர் (சிறுகதைத் தொகுப்பு)

வெளி இணைப்புக்கள்