ஆளுமை:ஜசிந்தா, செல்வரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜசிந்தா செல்வரத்தினம்
தந்தை செல்வரத்தினம்
பிறப்பு 1961.12.08
ஊர் நல்லூர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ.ஜசிந்தா (1926.12.08 - ) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செல்வரத்தினம். இவர் வேம்படி மகளிர் கல்லூரியில் க.பொ.த. உயர்தர வகுப்பில் உயிரியல் படித்த மாணவியாவார்.

இயற்கை எழில் காட்சிகளையும், சினிமா நட்சத்திரங்களின் படங்களையும் வரைந்து வந்த இவர் பின்னர் தத்ரூபமான உயிர் ஓவியங்களை வரைந்ததோடு ஆலயங்களின் திரைச்சீலைகளையும் வரைந்து வரலானார். எண்ணாயிரம் ஓவியங்களுக்கு மேல் வரைந்து சாதனை படைத்திருக்கும் இப் பெண் ஓவியர் கனடா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, லண்டன் ஆகிய நாடுகளிலுள்ள இந்து ஆலயங்களுக்கு வசந்த மண்டப திரைச்சீலைகளை வரைந்து அனுப்பியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 197