ஆளுமை:தசாயினி, நிசாந்தன்

From நூலகம்
Name தசாயினி
Pages நாகேந்திரம்
Pages தவமணி
Birth 1995.03.02
Place கிளிநொச்சி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தசாயினி, நிசாந்தன் (1995.03.02) கிளிநொச்சி புளியம்பொக்கனையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகேந்திரம்; தாய் தவமணி. ஆரம்ப, இடைநிலைக்கல்வியை கிளிநொச்சி கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்திலும், உயர் கல்வியை கிளிநொச்சி தருமபுரம் மத்தியக்கல்லூரியிலும் கற்றார். பாடசாலைக்காலத்திலேயே எழுத்துத்றையில் பிரவேசித்துள்ளார் தசாயினி. கட்டுரை, சிறுகதை, சிறுவர்கதை எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் கண்டாவளை பிரதே சபையினால் வெளியிடப்பட்டுள்ள ”வளை ஓசை” மலரில் வெளிவந்துள்ளன. தேசிய இலக்கிய போட்டிகளில் இவரின் ஆக்கங்கள் பரிசில்களையும் பெற்றுள்ளன. புளியம்பொக்கனை அறநெறி ஆசிரியரான இவர் கண்ணகி கலாமன்றத்தின் செயலாளராகவும் இருந்து சமூக சேவையும் செய்து வருகிறார்.


குறிப்பு : மேற்படி பதிவு தசாயினி, நிசாந்தன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.