ஆளுமை:பத்மநாப ஐயர், இரத்தின ஐயர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:20, 7 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பத்மநாப ஐயர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மநாப ஐயர்
தந்தை இரத்தின ஐயர்
பிறப்பு
ஊர்
வகை இலக்கியச் செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மநாப ஐயர், இரத்தின ஐயர் ஓர் இலக்கியச் செயற்பாட்டாளர். இவரது தந்தை இரத்தின ஐயர். இவர் ஈழத்து இலக்கியம் என காணப்படும் யாவற்றிற்கும் ஏதோ ஒரு வகையில் உதவி புரிந்துள்ளார். இவரது முயற்சியால் பல ஈழத்து நூல்கள் தமிழகத்தில் வெளிவந்துள்ளன. 60இல் மலேசிய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்கள் அடங்கிய அக்கரை இலக்கியம், 80இல் பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற தொகுப்பு, தொடர்ந்து மரணத்துள் வாழ்வோம் என்ற கவிதைத் தொகுப்பு, தேடலும் படைப்புலகமும் என்ற ஓவியர் மாற்கு பற்றிய ஆய்வு நூல் ஆகியன வெளிவருவதற்கு இவர் முன்னின்று உழைத்துள்ளார்.

1983இல் புலம்பெயர்ந்து தற்சமயம் இலண்டனில் வாழும் ஐயர் தமிழர் நலன்புரி சங்கம் ஊடாக 1996இல் தொகுப்பு நூலையும் 1997இல் கிழக்கு மேற்கு எனும் தொகுப்பு நூலையும் 1998இல் யுகம் மாறும் எனும் தொகுப்பையும் 2001இல் கண்ணில் தெரியுது வானம் என்ற தொகுப்பு நூலையும் உலக தமிழ் இலக்கியப் பரப்பில் முன்வைத்துள்ளார்.

2003ஆம் ஆண்டில் கனடாவில் இருக்கும் இலக்கிய அமைப்பினால் வழங்கப்படும் இயல் விருதையும் இவர் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 394 பக்கங்கள் 12